வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 28 நவம்பர் 2018 (10:53 IST)

39 மனைவிகள், 94 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் 73 வயது முதியவர்

மிசோரம் மாநிலத்தில் முதியவர் ஒருவர் 181 குடும்ப உறுப்பினர்களுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நவீன காலக்கட்டத்தில் கூட்டுக்குடும்பங்களை பார்ப்பதே அரிதாக இருக்கிறது. ஒரு காலக்காட்டத்தில் கூட்டுக்குடும்பங்கள் இல்லாத குடும்பமே இல்லாத சூழ்நிலை மாறி தற்பொழுது எல்லாம் தனிக்குடித்தனம் தான். இப்படி இருக்கும் வேளையில் மிசோரத்தில் ஒருவர் 181 குடும்ப நபர்களுடன் கூட்டுக்குடும்பமாக வாழ்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
மிசோரம் மாநிலத்தை சேர்ந்த 73 வயதான ஜியோனா தமது 39 மனைவிகள், 94 பிள்ளைகள், 14 மருமகள்கள், 34 பேரக்குழந்தைகள் என 181 குடும்ப உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் செல்லப் பிராணிகளையும் வளர்த்து வருகிறார்கள். இதனை அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்க்கிறார்கள்.