வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 அக்டோபர் 2018 (15:19 IST)

100 வயது கிழவியை கற்பழித்த 21 வயது காமுகன்

மேற்கு வங்கத்தில் 100 வயது பாட்டியை 21 வயது வாலிபர் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மேற்கு வங்கத்தில் 100 வயது பாட்டி ஒருவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.  பாட்டியின் வீட்டிற்குள் நுழைந்த அபிஜித் பிஸ்வாஸ்(21) என்ற மனித மிருகம், அந்த பாட்டியை பலவந்தபடுத்தி கற்பழித்துள்ளான். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அந்த அயோக்கியனை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
 
இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த அந்த பாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த அயோக்கியனுக்கு கொடூர தண்டனை வழங்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.