தொடர்புடைய செய்திகள்
- ரூ.50 லட்சம் மதிப்பிலான 10 டன் குட்கா பறிமுதல்.! கண்டெய்னரில் கடத்தி வந்த ஓட்டுநர் கைது.!
- இறுதி சடங்குக்கு காசில்ல..! தாயின் சடலத்தை சாலையில் வைத்து பிச்சை கேட்ட சிறுமி! - நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்!
- நான் சாகும் வரை என்னை விசாரித்து கொண்டு இருப்பார்கள்: பொன் மாணிக்கவேல்
- பொன்மாணிக்கவேல் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை.. என்ன காரணம்?
- பள்ளிகளில் அதிகரித்து வரும் கஞ்சா புழக்கம்: வேடிக்கைப் பார்க்கும் தமிழக அரசு: அன்புமணி
புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்திய நபர் கைது.. ரகசிய அறையில் 83 கிலோ..!
தெலங்கானா மாநிலத்தில் புஷ்பா பட பாணியில் கஞ்சா கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தில் கஞ்சா கடத்துவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் வந்ததையடுத்து கன்கோல் சோதனைச் சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது போலீசார் கண்ணில் எந்தப் பொருளும் சிக்கவில்லை.
இருந்தும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம் எழுந்ததால் காரின் இருக்கைகளை எடுத்து பார்த்தபோது, அதில் ரகசிய அறைகள் அமைத்து 83 கிலோ கஞ்சா கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே அந்த 83 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கஞ்சாவின் மதிப்பு ரூ.33 லட்சம் என தெரிவித்துள்ள போலீசார், இவை அனைத்தும் ஆந்திரா-ஒடிசா எல்லை மலை கிராமத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு கடத்தப்பட இருந்ததாக கூறினர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Edited by Siva
