1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (12:34 IST)

காமத்தை அடக்க முடியாத வாலிபர்: 75 வயது மூதாட்டியை தரதரவென இழுத்து சென்று...?

காமத்தை அடக்க முடியாத வாலிபர்: 75 வயது மூதாட்டியை தரதரவென இழுத்து சென்று...?

சமீப காலமாக பல வாலிபர்கள் காம உணர்ச்சி பெருக்கால் பல முறையற்ற செயல்களை செய்கின்றனர். வயது வித்தியாசம் பார்க்காமல் கொடூர சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.


 
 
மூதாட்டியை பலாத்காரம் செய்த வால்பர் என பல செய்திகளை பார்த்திருப்போம். அதே போல ஒரு வாலிபர் தனது காம உணர்ச்சியை அடக்க முடியாமல் இங்கு ஒரு 75 வயது மூதாட்டியை பலவந்தமாக இழுத்து சென்று பலாத்காரம் செய்த சம்பவம் நடந்துள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தில் ரயில் நிலையம் ஒன்றில் 75 வயதான மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ரயில்வே ஊழியரான வாலிபர் ஒருவர் அந்த மூதாட்டியை தரதரவென இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
 
இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்ட மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு நடந்த கொடுமையான சம்பவத்தின் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத மூதாட்டியால் தற்போது பேச முடியவில்லை.
 
இதனையடுத்து மூதாட்டியை பலாத்காரம் செய்த ரயில்வே ஊழியர் மீது ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.