1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 10 செப்டம்பர் 2022 (15:42 IST)

இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை- ராகுல் காந்தி

rakulgandhi
2024 ஆம் ஆண்டு இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதில், பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வரும் நிலையில்,  கட்சியை பலப்படுத்த ராகுல் திட்டமிட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, ராகுல் யாத்திரை பயணம் தேர்வு செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, ஒற்றுமை என்ற பெயரில் நடைபயண யாத்திரை 12 மாநிலங்கள் வழியாக சுமார் 3,570 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற உள்ளது.

இந்த நடைபயணத்தில் ராகுல்காந்தியுடன் 118 காங்கிரஸ் உறுப்பினர்கள் நடைபயணமாக செல்ல உள்ளனர். இந்த 118 பேரும் தங்குவதற்கு சகல வசதிகளுடன் 60 கேரவன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நடைபயணம் தொடங்கி 4  நாட்கள் ஆகியுள்ளது.

இந்த நிலையில்,  இந்தியாவில் 42% இளைஞர்களுக்கு வேலை இல்லை என்றும், நாட்டின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா என்று தன் டிவிட்டர் பக்கத்தில் காங்கிரஸ் எம்பி.,ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.