1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (09:03 IST)

உக்ரைனில் இன்னும் 50 இந்தியர்கள்: அதிர்ச்சி தகவல்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில் உக்ரைன் உள்ள இந்தியர்கள் அனைவரும் மீட்கப்பட்டு விட்டதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி உக்ரைன்  நாட்டில் இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் இருப்பதாகவும் தற்போது அவர்களில் சிலர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
 இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய வெளியுற வுத்துறை இணை அமைச்சர் மீனாட்சி இன்னும் 40 முதல் 50 இந்தியர்கள் உக்ரைனில் இருப்பதாகவும் அதில் சிலர் மட்டுமே நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் விருப்பம் தெரிவித்தவர்களை மீட்க இந்திய தூதரகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்