வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 8 ஜூலை 2016 (04:55 IST)

நிர்வாண டான்ஸ் ஆடிய 37 பேர் கைது

பெங்களூரூவில் நிர்வாண நடனம் ஆடிய 37 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
 

 
பெங்களூருவில் நகரின் மையப் பகுதியில் பீல்டு மார்ஷல் கே.எம் கரியப்பா சாலையில் உள்ளது. இங்கு ஒரு பிரபல உணவு விடுதி உள்ளது. அத்துடன் இந்த உணவு விடுதியில் பார் வசதி உள்ளது.
 
இந்த பாரில் இசைக்கு ஏற்ப நடனம் ஆடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நேரம் ஆகஆக டான்ஸ் நடன மங்கைகள் சிலர் ஆடைகளைக் கழட்டிவீசிவிட்டு நிர்வாண ஆட்டம் போடுவதை வழக்கமாக கொண்டு இருந்தனர்.
 
இந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து, அந்த உணவு விடுதிதை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது இந்த தகவல் உறுதியானது. இதனையடுத்து, நிர்வாண நடனம் ஆடிய 37 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், தரையில் வீசப்பட்ட ரூ. 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
இந்த பாரில் நிர்வாண நடனம் ஆடிய நேபாளம் மற்றும் பீகார் மாநிலங்களைச் சேர்ந்த 77 பெண்கள் அதிரடியாக மீட்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியுள்ளது.