1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 13 ஏப்ரல் 2022 (08:49 IST)

20 கோடி கொரோனா தடுப்பூசி கையிருப்பு உள்ளது: சீரம் நிறுவனம் தகவல்!

vaccine
20 கோடி கொரோனா வைரஸ் தடுப்பூசி கையிருப்பு உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஒரு ஆண்டாக அனைவருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது என்பது தெரிந்ததே.,  சீரம் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான கொரோனா வைரஸ் தடுப்பூசி தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டது. 
 
இந்த நிலையில் தற்போது தடுப்பூசி செலுத்துவது கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 20 கோடி தடுப்பூசிகள் இருப்பதாக நிறுவனத்தின் சீரம் நிறுவனத்தின் சி.இ.ஓ தகவல் தெரிவித்துள்ளார் 
 
இந்த தடுப்பூசிகளை ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளதாகவும் ஏற்கனவே 4 கோடி தடுப்பு ஊசிகள் ஏற்றுமதி செய்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்