1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (08:26 IST)

ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா: தமிழகத்தை முந்தியது டெல்லி

ஒரே நாளில் 166 பேருக்கு கொரோனா:
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிர மாநிலம் முதலிடத்தில் உள்ளது. இதனை அடுத்து தமிழகம் இரண்டாம் இடத்தில் நேற்றுவரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று மட்டும் தமிழகத்தில் 58 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 969 பேர் தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று இரவு வந்த தகவலின் படி டெல்லியில் ஒரே நாளில் 166 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1069 ஆக உயர்ந்தது. இதனால் தமிழகத்தை மூன்றாவது இடத்துக்கு பின்னுக்கு தள்ளிவிட்டு டெல்லி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
டெல்லியில் ஒரே நாளில் 166 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதால் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் இதனை அடுத்து தீவிர நடவடிக்கை எடுக்கவும் ஊரடங்கு உத்தரவை கடுமையாக பின்பற்றவும் டெல்லி அரசு, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது