1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Today share market sensex and nifty status

சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் மேல் உயர்வு.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

share
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று பங்குச்சந்தை சுமார் 300 பள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தெே ஏற்றத்தில் இருந்து வரும் நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 340 புள்ளிகள் உயர்ந்து 61,610 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய வாக்கு சந்தை நிஃப்டி சுமார் 100 புள்ளிகள் உயர்ந்து 18,115 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில நாட்களாக சரிவில் இருந்த பங்குச் சந்தை இன்று மீண்டும் 300 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுனர், நடத்துனர் பணி! – தமிழக அரசு அறிவிப்பு!