1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:33 IST)

நீண்ட சரிவுக்கு பின் உயர்ந்தது சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் நிம்மதி!

Share
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் கடந்த சில நாட்களாக பெரும் சரிவில் இருந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.
 
கடந்த வாரம் சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது என்றும் நேற்று சுமார் 900 புள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்தது என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் 550 புள்ளிகள் உயர்ந்து 57670 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 17 ஆயிரத்து 170 என்ற புலிகளின் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
வரும் நாட்களிலும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்கும் என பங்குச்சந்தை நிபுணர்கள் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.