தொடர்புடைய செய்திகள்
- ட்ரம்ப் அறிவிப்பால் பங்குச்சந்தை வரலாறு காணாத உயர்வு.. 1 மணி நேரத்தில் 13 லட்சம் கோடி ரூபாய் லாபம்...!
- டிரம்ப் அறிவித்த போர் நிறுத்தம் எதிரொலி: இந்திய பங்குச்சந்தை இன்று ஏற்றம்..!
- ஹார்முஸ் ஜலசந்தி முடங்கும் அபாயம்.. ரணகளமான பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 1650 புள்ளிகள் சரிவு..!
- 12 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்.. பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்கள் கோவிந்தா கோவிந்தா..!
- படுபாதாளத்திற்கு சென்ற பங்குச்சந்தை.. இன்று ஒரே நாளில் சென்செக்ஸ் 1700 புள்ளிகள் சரிவு..
ஒரே ஒரு நாள் தான் ஏற்றம்.. மீண்டும் தலைகீழாக சரிந்த பங்குச்சந்தை..
நேற்று இந்திய பங்குச்சந்தை உச்சத்திற்கு சென்ற நிலையில் இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,500 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்தது, அதேபோல் நிஃப்டி 22,200 புள்ளிகளுக்குக் கீழ் சென்றது.
இந்த திடீர் சரிவுக்கு முக்கியமாக ஆறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை, உலகளவில் கச்சா எண்ணெய் விலையை உயர்த்தியதோடு முதலீட்டாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்திய ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகள் மற்றும் வங்கி பங்குகளில் ஏற்பட்ட சரிவு ஆகியவை சந்தை வீழ்ச்சிக்கு கூடுதல் காரணங்களாக அமைந்தன.
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அந்நிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளை திரும்பப் பெற தொடங்கியுள்ளனர். பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் குறித்த கவலைகளும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை தளர்த்தியுள்ளன.
இந்திய பொருளாதாரம் இந்த சர்வதேச நெருக்கடிகளை எப்படி கையாள போகிறது என்பதை பொறுத்தே சந்தையின் அடுத்தகட்ட நகர்வு அமையும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
Edited by Siva
