தொடர்புடைய செய்திகள்
- வேட்புமனுவை வாபஸ் பெற கால அவகாசம் முடிந்தது. இன்னும் சிறிது நேரத்தில் வேட்பாளர் பட்டியல்..
- யாராக இருந்தாலும் சோதனை செய்வோம்.! அமைச்சரின் காரை நிறுத்திய அதிகாரிகள்..! கோவையில் பரபரப்பு...!!
- முதல்முறையாகக் குழந்தைகள் கொண்டாட Sofa Boy கலக்கும் "ஸ்கூல் லீவ் விட்டாச்சு" ஆல்பம் பாடல் !!
- Fans war இந்தியாவில் அசிங்கமான நிலைக்கு செல்கிறது… அஸ்வின் ஆதங்கம்!
- வழி பாட்டு தலங்களில் ஒரு குறிப்பிட்ட வேட்ப்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுவதை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும்-பொன். இராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஆதரவா..? பெண் அதிகாரி சஸ்பெண்ட்..! எதற்காக தெரியுமா..?
தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் காரை முறையாக சோதனை மேற்கொள்ளவில்லை என்ற புகாரில் பெண் தேர்தல் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நீலகிரி தொகுதியில் திமுக சார்பில் ஆ.ராசா நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசாவின் காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் முறையாக சோதனை மேற்கொள்ளவில்லை என்று புகார் எழுந்தது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருணா தலைமையில் தேர்தல் அலுவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் முறையாக வாகன பரிசோதனை மேற்கொள்ளவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதாவை இன்று முதல் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தேர்தல் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
