1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடாளுமன்ற தேர்தல் 2024
Written By J.Durai
Last Modified: பெரம்பலூர் , வியாழன், 28 மார்ச் 2024 (14:31 IST)

தேர்தல் பிரச்சாரத்தின் போது-அமைச்சர் கே.என்.நேருவுக்கு உடல் நலக்குறைவு!

பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளரும் நகர்ப்புற துறை அமைச்சர் கே.என்.நேருவின் மகனுமான அருண் நேருவுக்கு குளித்தலை சட்டமன்ற தொகுதி பகுதிகளில் அமைச்சர் கே.என் நேரு பிரச்சாரம் மேற்கொண்டார்.
 
அந்த சமயத்தில் கரூர் அருகே உள்ள தோகைமலை கொசூரில் “எனக்கு மயக்கமாக இருக்கிறது. என்று ஒரு வரி மட்டும் பேசிவிட்டு கிளம்புறேன்” என்று கூறிய அமைச்சர் கே.என்.நேரு, 
 
“எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்துவிட்டு  பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி தனது காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். 
 
திடீர் உடல் நலக்குறைவால் பிரச்சாரத்தை கைவிட்டு மருத்துவமனைக்கு சென்றார்.
 
இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.