வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2019 (11:30 IST)

அமேதி தொகுதிக்கு வந்தார் ராகுல் – இன்று இரண்டாவது வேட்புமனுத்தாக்கல் !

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த மக்களவைத் தேர்தலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வழக்கமாக அவர் போட்டியிடும் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதியிலும் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். அமேதி தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக அவர் மக்களவி உறுப்பினராக இருந்துவருகிறார். 2004, 2009 மற்றும் 2014 ஆகிய தேர்தல்களில் அந்த தொகுதியில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.

கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி தனது தங்கை பிரியங்கா காந்தியோடு வந்து  ஏப்ரல்  4 ஆம் தேதி மனுத்தாக்கல்  செய்தார். அங்கு அவருக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதையடுத்து அவரது ஆஸ்தான தொகுதியான அமேதியில் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்ய இருக்கிறார். அதற்காக ராகுல் இப்போது அமேதி தொகுதிக்கு சென்றுள்ளார்.

ராகுல் இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது வரவேற்பையும் விமர்சனங்களையும் ஒருங்கே பெற்றுள்ளது.