வியாழன், 9 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Mahalakshmi
Last Modified: புதன், 17 ஜூன் 2015 (11:01 IST)

இடம் இருக்கு பொருள் இருக்கு ஏலத்தில் எடுக்க ஆள்தான் இல்லை

இடம் இருக்கு பொருள் இருக்கு ஏலத்தில் எடுக்க ஆள்தான் இல்லை
பாராட்டு கிடைக்குது, ஆனால் பணம் வரலை. அதனால் கமர்ஷியலா எடுக்கப் போறேன் என்று தண்ணீர்பறவை இயக்குனர் கொடைக்கானலுக்கு ஒரு குரூப்போடு கிளம்பிப் போய் பிரதர்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படம் இயக்கினார். படம் முடிந்து பல மாதங்களாகிறது. இன்னும் படம் திரைக்கு வருவதாக இல்லை.
 
காரணம், படம் சரியில்லையாம். படத்தைப் பார்த்த யாரும் வாங்க முன்வராததால்தான் இன்னும் பெட்டிக்குள்ளேயே கிடக்கிறது. இந்நிலையில் சேனாதிபதியை இயக்கப் போறேன் என்று இயக்குனர் அவராகவே ஒரு புரளியை கிளப்பி, இப்போ அவருக்கு என்னிடம் கதையில்லை, கதை இருந்தால் நிச்சயம் அவரிடம் போய் கதை சொல்வேன் என்று ஒரு சும்மாச்சுக்கும் ஒரு மறுப்பை வெ ளியிட்டிருக்கிறார். 
 
இந்த விவேகத்தை கதை பண்றதுல காட்டுங்க பாஸ்.