75 வயதில் சிம்லா அழகி கேட்கும் இயக்குனர்
சேனாதிபதியின் தந்தை சட்டம் தொடர்பான படங்கள் எடுத்து பிரபலமானவர். மகனை நடிகனாக்கிய பிறகு அவ்வளவாக படங்கள் இயக்கவில்லை. அவ்வப்போது அடல்ஸ் ஒன்லி டைப்பில் சில படங்கள். இனி படம் இயக்கியது போதும் ஓய்வு பெறப் போகிறேன் என்று அறிவித்து, கொட்டாயில் படம் காண்பிப்பார்களே.... அந்த பெயரில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
மூன்று கதைகள் உள்ள இந்தப் படத்தில் ஒரு கதையில் இவர்தான் நாயகன். 75 வயது தாத்தாவான இவர் சிம்லா அழகி ஒருவரை காதலிப்பது போல் கதை பின்னப்பட்டுள்ளதாம். இந்தக் கதைக்காகவே இவர் படத்தை எடுப்பதாகவும் நையாண்டி செய்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
எழுபதுக்கு மேல்தான் சிலருக்கு இளமை ஊஞ்சலாடுகிறது.