மக்களும் ரசிக்கலை, தயாரிப்பாளரும் சிரிக்கலை
சமீபத்தில் நடந்த திரைப்பட விழாவில் பேசிய தாடி வைத்த தசாவதானி சாண்டல்வுட் காமெடியரை பெயர் குறிப்பிடாமல் தாக்கிப் பேசினார்.
தயாரிப்பாளர்களின், திரையுலகின் நெருக்கடிகளை உண்மையாக அறிந்து பேசி வரும் அவர், நான் ஒரு காமெடி நடிகரை அறிமுகப்படுத்தினேன். அப்போது அவரது சம்பளம் ஆயிரத்து ஐநூறு ரூபாய். ஆனால் இன்று அவர் கோடிகளில் சம்பளம் வாங்குகிறார். காமெடி நடிகர்கள் என்றால் மக்களும் சிரிக்க வேண்டும், தயாரிப்பாளரும் சிரிக்க வேண்டும். இப்போது இரண்டுமே நடப்பதில்லை என்றார்.
உண்மையை பேசுவதில் இப்போது தசாவதானிக்குதான் தமிழ் திரையுலகில் முதலிடம்.