1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2017
  4. IPL 2017, RCB can't rely on Kohli Everytime

கோலி மட்டும் எப்படி பொறுப்பாக முடியும்; ஆவேசமடைந்த பயிற்சியாளர்

கோலி
விராட் கோலி மட்டுமே பெங்களூர் அணியின் தோல்வி எப்படி காரணமாக முடியும். அவர் மீது பழி சுமத்துவது தவறு என இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் தெரிவித்துள்ளார்.


 


 
பெங்களூர் அணி தற்போது நடத்துக்கொண்டிருக்கும் ஐபிஎல் 10வது சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடிய பெங்களூர் அணி 10 ஆடத்தில் தோல்வி அடைந்தது. அதுவும் ஒரு போட்டியில் 49 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
 
பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஐபிஎல் சீசனில் விளையாடியதை விட இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் சரியாக விளையாடவில்லை. காயம் காரணமாக கோலி முதல் 4 ஆட்டங்களில் விளையாடவில்லை. 
 
பெங்களூர் அணியின் தோல்விக்கு காரணம் கோலிதான் என பலரும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து வருத்தம் தெரிவித்துள்ள இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் கூறியதாவது:-
 
பெங்களூர் அணியின் இந்த நிலைமைக்கு கோலி மீது பழி சுமத்துவது தவறு. கோலியால் வெற்றிப்பெற முடியும் ஆனால் அதற்கு அணியின் பங்களிப்பு வேண்டும். வெறும் ஒருவரை மட்டுமே எல்லா நேரங்களில் நம்ம முடியும், என்றார்.
About Writer
Abimukatheesh
அடுத்த கட்டுரையில்
67 பந்துகளில் 200 ரன்கள்: உதயமாகிறார் அடுத்த சச்சின்