1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By Siva
Last Modified: திங்கள், 13 நவம்பர் 2023 (13:02 IST)

தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்.. எந்தெந்த பகுதிகளுக்கு?

Rain
தமிழகத்தின் கடலோர பகுதி மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.  குறிப்பாக வங்க கடலில் தோன்றியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியை காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் நவம்பர் 14 15 ஆகிய இரு தினங்களில் தமிழகம் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டிருந்தது 
 
இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 13 , 14 ஆகிய 2 தினங்களில் மிக கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 
Edited by Siva