தொடர்புடைய செய்திகள்
- தொடங்கியது மீனாட்சி அம்மன் தேரோட்டம்.. மாசி வீதிகளில் குவிந்த பக்தர்கள்..!
- தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம்: கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு..!
- ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்: குவிந்த பக்தர்கள்..!
- 7 குளங்களைக் காணவில்லை- மாவட்ட ஆட்சியரிடம் புகார்
- திருவள்ளூர் எம்.பி ஜெயக்குமாருக்கு கொரோனா தொற்று: வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகத் தகவல்!
திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டம்: ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள்
மிகவும் புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று தேரோட்டம் நடைபெற்றது அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய அம்சமான தேரோட்டம் இன்று நடைபெற்றது.
இன்று காலை 7:30 மணிக்கு திருத்தேர் தேரடியில் இருந்து புறப்பட்டு பனகல் தெரு, குளக்கரை சாலை, பஜார் வீதி, வடக்கு ராஜவீதி, மோதிலால் தெரு வழியாக
சென்று மீண்டும் தேரடியை வந்து அடைந்தது. இந்த தேர் செல்லும்போது கோவிந்தா கோவிந்தா என்று ஏராளமான பக்தர்கள் கோஷமிட்டு வழிபட்டனர்.
Edited by Mahendran
