1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Thiruchendur Murugan Temple: Kanda Sashti Festival Schedule Announced

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா தொடங்குவது எப்போது? முழு அட்டவணை வெளியீடு!

திருச்செந்தூர்
முருகப்பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா, அக்டோபர் 22 அதிகாலை யாக பூஜையுடன் தொடங்குகிறது.
 
அக்டோபர் 22 அன்று அதிகாலை 1 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெறும். அக்டோபர் 23 முதல் 26 வரை தினமும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, யாக பூஜை மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இந்த நாட்களில், மாலை 6 மணிக்குச் சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி உலா வருவார்.
 
விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், அக்டோபர் 27 அன்று நடைபெறுகிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. மாலை 4 மணிக்குச் சுவாமி கடற்கரையில் எழுந்தருளி, சூரபத்மனைச் சம்ஹாரம் செய்யும் வைபவம் நடைபெறும்.
 
திருவிழாவின் 7-வது நாளான அக்டோபர் 28 அன்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, இரவு 11 மணிக்கு ராஜ கோபுரம் அருகில் திருக்கல்யாணம் வைபவம் நடைபெற உள்ளது.
 
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும்! - இன்றைய ராசி பலன்கள் (10.10.2025)!