1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. Panchami Thithi: A Powerful Fast for a Prosperous Life!

பஞ்சமி திதி: வளமான வாழ்வுக்கான சக்திவாய்ந்த விரதம்!

 Panchami
பஞ்சமி திதி என்பது அளப்பரிய சக்திகளைக் கொண்ட ஒரு நன்னாள். இந்தத் திதியில் சக்தி தேவியை விரதமிருந்து வழிபட்டால், சகல நன்மைகளும் உண்டாகும் என்பது நம்பிக்கை. இந்த விரதத்தின் முக்கியத்துவத்தையும், அதைச் சரியான முறையில் கடைப்பிடிக்கும் வழிமுறைகளையும் இங்கே விரிவாகக் காணலாம்.
 
ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிந்த ஐந்தாம் நாளில் பஞ்சமி திதி வரும். 'பஞ்ச' என்றால் 'ஐந்து' என்று பொருள். திதி என்பது சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இரு கோள்களுக்கு இடையே உள்ள தூரத்தின் ஆதிக்கத்தை குறிக்கிறது. பஞ்சமி திதியன்று விரதமிருந்து வழிபடுவது தனிச்சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 
பஞ்சமி திதியன்று விரதம் மேற்கொண்டு, ஐந்து வகையான எண்ணெய்களைக் கலந்து, குத்துவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்றி வழிபட வேண்டும். விளக்கேற்றிய பிறகு, தீபத்தின் ஒரு முகத்தை உற்றுப் பார்த்தபடி, உங்கள் வேண்டுதல்களை மனதிற்குள் நினைத்துக்கொண்டு, 'ஓம் ஸ்ரீ பஞ்சமி தேவியை நமஹ' என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். மந்திரம் சொல்லி முடித்ததும், கற்கண்டு அல்லது பழங்களை நைவேத்தியமாகப் படைத்து வழிபாட்டை நிறைவு செய்யலாம்.
 
இந்த விரதத்தை விடாமல் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால், வாழ்வில் எல்லாவிதமான நன்மைகளையும் பெற்று வளமான வாழ்வு வாழலாம் என்று நம்பப்படுகிறது.  
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்த ராசிக்காரர்களுக்கு பணவரத்து திருப்தியளிக்கும்! இன்றைய ராசி பலன்கள் (14.07.2025)!