1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
  4. needa mangalam santhana ramar temple

இந்த கோவிலுக்கு சென்றால் புத்திர பாக்கியம் உடனே கிடைக்கும்..!

குழந்தை
குழந்தை இல்லாத தம்பதிகள் இந்த கோயிலுக்கு சென்றால் புத்திர பாக்கியம் உடனே கிடைக்கும் என்ற ஐதீகம் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் உள்ள சந்தன ராமர் கோயிலுக்கு உள்ளதாக ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். டெல்டா மாவட்டத்தில் நீங்கா புகழுடன் விளங்கும் சந்தன ராமர் கோவில் மிகவும் பிரபலமானது என்பதும் நீடாமங்கலம் நகரின் மையப் பகுதியில் உள்ள இந்த கோயிலுக்கு குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் வந்தால் ஒரு சில மாதங்களில் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மாதந்தோறும் இந்த கோவிலுக்கு வந்து தம்பதிகள் வழிபட்டால் குழந்தை பிறக்கும் என கூறப்படுகிறது.
 
குறிப்பாக வியாழக்கிழமையில் சந்தன கோபாலர் ஜெபம் செய்து சந்தன ராமரை வழிபட்டால் குழந்தை பாக்கியம் அடையலாம் என்பது ஐதீகம் அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர். 
 
சென்னையிலிருந்து மற்ற பகுதியில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வருகை தருவதாகவும் அந்த கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-03-2023)!