ஞாயிறு, 14 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 1 ஜூலை 2017 (17:54 IST)

அடுத்து நவம்பர் மாதத்தை குறி வைக்கும் மோடி?

அடுத்து நவம்பர் மாதத்தை குறி வைக்கும் மோடி?
மோடி அரசு நிதியாண்டு காலத்தைப் ஜனவரி முதல் டிசம்பர் என மாற்றத் திட்டமிட்டு வந்த நிலையில், தற்போது இந்த திட்டம் உறுதியாகியுள்ளது.


 
 
நிதியாண்டு காலத்தை 2018 ஆம் ஆண்டு முதல் ஜனவரி- டிசம்பர் வரையில் மாற்ற பட்ஜெட் அறிக்கையை வருகிற நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
ஏற்கனவே மத்திய அரசு, பிப்ரவரி மாதம் கடைசி நாளில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையை இந்த வருடம் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 
 
தற்போது நிதியாண்டின் காலத்தையும் மாற்றியமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டம் நவம்பர் மாதத்தில் முதல் வாரத்திலேயே துவங்கிவிடும் என தெரிகிறது.