1. செய்திகள்
  2. வேலை வழிகாட்டி
  3. வாய்ப்புகள்
  4. Central Industrial Security Force job opening

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் ஓட்டுநர் பணி

மத்திய தொழில் பாதுகாப்புப் படை
சென்னையில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
பணி பெயர்: கான்ஸ்டபிள்/ தீயணைப்புத்துறை ஓட்டுநர்கள்
 
காலியிடங்கள்: 156
 
பணியிடம்: சென்னை
 
கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஹெவி, லைட் மோட்டார் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
 
வயதுவரம்பு: 03.10.2015 தேதியின்படி 20 - 27க்குள் இருக்க வேண்டும்.
 
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு கட்டணம் இல்லை.

http://www.cisf.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
 
DIG, CISF (South Zone) Rajaji Bhavan, 
"D" Block, Besant Nagar, 
Chennai, 
Tamilnadu-600090.
 
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி நாள் : 10.10.2015
About Writer
Ashok