1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 14 மே 2021 (19:19 IST)

இவர்தான் நம்பர் 1 பேட்ஸ் மேன்- பாகிஸ்தான் வீரர் புகழாரம்

விராட் கோலிதான் நம்பர் 1 பேட்ஸ் மேன் என பாகிஸ்தான் வீரர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு தோனி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார். அதன்பிறகு இந்திய அணியின் கேப்டனாக இளம் வீரர் விராட் கோலி பொறுப்பேற்றார்.

முந்தைய ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிபோல் உலகில் பலமிக்க அணியாக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உள்ளது. சமீபத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 2-1 எனக் கைப்பற்றியது. பின்னர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி உலக டெஸ்ட் சேப்பியன்ஸிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இன்று சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான தரவரிக்கைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், இந்திய அணி 121 புள்ளிகளுடன்(24போட்டி) முதலிடத்தில் உள்ளது

ஐபிஎல் தொடரிலும் கோலி தலைமையிலான பெங்களூர் அணி சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர் யூசுப் விராட் கோலியைப் புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

விராட் கோலி நல்ல உடற்கட்டுடன் பயிற்சியிலும் கட்டுக்கோப்பாக உள்ளார். அதுதான் அவரது அபாரமான ஆட்டத்திறனை வெளிப்படுத்த  உதவுகிறது என நினைக்கிறேன். தற்போது 70 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் போட்டியில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளார். டெஸ்ட் போட்டியிலும் 10 ஆயிடம் ரன்கள் நெருங்கியுள்ளார். 3 தரமான ஆட்டத்தில் சிறப்பான சராசரியை வைத்துள்ளார்,இந்தக் காலத்தில் அவர்தான் நம்பர் 1 பேட்ஸ்மேன் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பலதரப்பிலிருந்து விராட் கோலிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.