தொடர்புடைய செய்திகள்
- சஞ்சு சாம்சனை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறோம்.. சரியன முடிவெடுக்கப்படும்- SKY பதில்!
- பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கைகுலுக்கிக் கொள்ளாத இந்தியா பாகிஸ்தான் கேப்டன்கள்!
- சஞ்சு சாம்சன் இடத்தில் கில் இறங்கக் கூடாது… ரவி சாஸ்திரி சொல்லும் காரணம்!
- இன்று தொடங்குகிறது ஆசியக் கோப்பை தொடர்… !
- ஆசியக் கோப்பைத் தொடர்… இந்திய அணியின் ஜெர்ஸியில் ஸ்பான்ஸர் இடம் காலி!
இந்தியாவுக்கு எதிரானப் போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம்… UAE கேப்டன் நம்பிக்கை!
17 வது ஆசியக்கோப்பை (20 ஓவர்) போட்டிகள் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. தொடர் 28ம் தேதி வரை நடைபெற உள்ளது. துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கும் இந்த போட்டிகளில் இந்தியா உட்பட 8 கிரிக்கெட் அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் துபாயில் முகாமிட்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் UAE அணிக்கு எதிராக விளையாடவுள்ளது. இதுவரை இந்திய அணியை நான்கு போட்டிகளில் எதிர்கொண்டுள்ள UAE. அந்த நான்கு போட்டிகளிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இதனால் இன்றைய போட்டியில் இந்திய அணி எளிதாக வெற்றிபெற்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் UAE கேப்டன் முகமது வசீம் இந்தியாவுக்கு எதிரான போட்டியை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் எனக் கூறியுள்ளார். மேலும் “எல்லா போட்டிகளும் எங்களுக்கு ஒரே மாதிரிதான். திட்டமிட்டதைக் களத்தில் செயல்படுத்துவோம். எல்லா அணிகளும் இங்கு அதிகமாகக் கிரிக்கெட் விளையாடுகின்றனர். ஆனால் இது எங்கள் சொந்த மைதானம்” எனக் கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்