1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 5 மே 2022 (21:40 IST)

என்னைக் கருவிலேயே கலைக்க சொன்ன தந்தை- கிரிக்கெட் வீரர் உருக்கம்!

Rowman Powell
பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவர் தனது குடும்பம் குறித்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 15 வது ஐபிஎல்-சீசன் நடந்து வருகிறது. இதில், டெல்லி  கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வரும்  அதிரடி பேட்ஸ் மேன் ரோவ்மன் பாவேல்.

இந்த சீசனில் இவரை ரூ.2.80 கோடி கொடுத்து, டெல்லி அணி நிர்வாகம் விலைக்கு வாங்கியது.

இந்நிலையில், பேட்ஸ் மேன் ரோவ்மன் பாவேல் தனது குடும்பம் குறித்துத் தெரிவித்துள்ளார். அதில், ஜமைக்கா துறைமுகம் அருகில் உள்ள பானிஸ்டர் மாவட்டத்தில்  ஒரு சிறிய வீட்டில் நான் பிறந்தேன். தன் தந்தையை  நேரில் பார்த்ததில்லை.தன் தாயின் வயிற்றில் கருவாக இருந்தபோதே என்னைக் கலைக்கும்படி தந்தை தொல்லை செய்துள்ளார். இதற்கு தாய் மறுக்கவே, அப்பா எங்களை விட்டு தனியே சென்றுவிட்டார் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், தாயும் சகோதரியும்தான் என்னை வளர்த்ததாக தெரிவித்துள்ளார்