1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 21 ஆகஸ்ட் 2023 (08:48 IST)

எதிர்கால இந்தியாவின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்.. முன்னாள் வீரரின் கருத்து!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ருத்துராஜ் கெய்க்வாட், விரைவில் இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்போது அயர்லாந்து தொடரில் அவருக்கு தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ருத்துராஜின் பேட்டிங் திறமை குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரர் கிரண் மோரே “ருத்துராஜ் எதிர்கால இந்தியாவின் கேப்டனாகும் தகுதிகளைக் கொண்டுள்ளார். மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் அடிப்படையை அவர் புரிந்துள்ளார்.” எனக் கூறியுள்ளார்.