அணி நிர்வாகத்தோடு கருத்து வேறுபாடு… சிஎஸ்கே அணிக்குத் தாவுகிறாரா ரிஷப் பண்ட்?

vinoth
சனி, 20 ஜூலை 2024 (13:39 IST)
கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகியுள்ள ஐபிஎல் தொடரில் களமிறங்கி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை வழிநடத்தினார்.

இதையடுத்து நடந்த உலகக் கோப்பை தொடரிலும் மிகச்சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு ஒரு காரணியாக அமைந்தார். இந்நிலையில் அவர் கேப்டனாக செயல்பட்டு வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்வாகத்தோடு அவருக்கு மோதல் எழுந்துள்ளதாகவும் அதனால் அவர் சி எஸ் கே அணிக்கு தாவ உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சி எஸ் கே அணியில் தோனி விரைவில் ஓய்வு பெற உள்ள சூழ்நிலையில் அடுத்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட்டை அணிக்குள் கொண்டுவர சி எஸ் கே அணியும் ஆசைப்படுவதாக தெரிகிறது.

எல்லாம் காட்டு

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments