1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2023 (07:22 IST)

பாகிஸ்தான் போட்டியைக் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு… பிசிசிஐ திடீர் அறிவிப்பு!

ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5ம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. இதற்கான அணி வீரர்கள் தேர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இந்த முறை முழு உலகக் கோப்பை தொடரும் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடக்கின்றன.

இந்நிலையில் விரைவில் அணிகளுக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடங்க உள்ளன. தராபாத்தில் நியுசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் ஆடுவதாக திட்டமிடப்பட்டுள்ளது. இதில் முதல் போட்டி செப்டம்பர் 29 ஆம் தேதி நியுசிலாந்து அணிக்கெதிராக ஐதராபாத்தில் நடக்க உள்ளது.

இந்த போட்டியைப் பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தரப்பு அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.