பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஸா ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை
ஊக்கமருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஸா ஹசனுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராவார் ரஸா ஹசன். இவர் ஜனவரி மாதம் நடந்த உள்ளூர் போட்டிகளில் பங்குபெற்றபோது, ரஸா ஹசனின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மேலும் பரிசோதனை முடிவில் ரஸா ஹசன் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதன் காரணமாக ரஸா ஹசனுக்கு சர்வதேச போட்டிகளில் விளையாட 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.