கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் எண்ணம் இல்லை… ஜோ ரூட் திட்டவட்டம்!

செவ்வாய், 18 ஜனவரி 2022 (10:09 IST)
இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட் ஆஷஸ் தொடரை தன் தலைமையில் மிக மோசமாக இழந்துள்ளார்.

நடந்து முடிந்த ஆஷஸ் தொடர் இங்கிலாந்து அணிக்கு பெருத்த அடியாக விழுந்துள்ளது. 4-1 என்ற கணக்கில் ஆஸியிடம் வீழ்ந்த நிலையில் அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவேண்டும் என்றும் கருத்துகள் முன் வைக்கப்படுகின்றன.

இதுகுறித்து பேசியுள்ள ஜோ ரூட் ‘அணியை முன்னோக்கி வழிநடத்தி செல்ல சரியான நபர் நான் என நினைக்கிறேன். தோல்வியில் இருந்து வெற்றிப்பாதைக்கு என்னால் அணியை கொண்டு செல்ல முடியும் என நம்புகிறேன். ஆனால் அதை என் கைகளில் இருந்து பிடுங்க நினைத்தால் அப்படியே நடக்கட்டும்’ எனக் கூறியுள்ளார். கடந்த சில மாதங்களாக பென் ஸ்டோக்ஸை டெஸ்ட் அணிக்கு கேப்டனாக்க வேண்டும் என்று குரல்கள் எழுந்து வருகின்றன.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments