வெள்ளி, 20 செப்டம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 20 ஜூலை 2024 (07:54 IST)

நடாஷாவுக்கு இத்தனை கோடி ஜீவனாம்சம் கொடுத்தாரா ஹர்திக்?... தீயாய் பரவும் தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.

மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- நடாஷா திருமண வாழ்வில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக விவாகரத்தை அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து நடாஷா ஜீவ்னாம்சமாக 170 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளைப் பெற்றதாக ஒரு தகவல் வேகமாகப் பரவி வருகிறது. ஆனால் சமீபத்தையைக் கணிப்புகளின் படி பாண்ட்யாவின் சொத்து மதிப்பே 90 கோடி ரூபாய்தானாம். அதுமட்டுமில்லாமல் அவரின் பெரும்பாலான சொத்துகள் அவரின் தாயார் பெயரில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் அவ்வளவு பெரிய தொகையை அவர் கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.