1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 13 மே 2023 (19:30 IST)

ஐபிஎல்-2023: டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அதிரடி முடிவு

ஐபிஎல் -16 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்து வீச்சு  தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல்-2023, 16 வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், இன்றைய போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் விளையாடவுள்ளது.

இன்றைய போட்டியில், 59 வது லீக் ஆட்டத்தில், இரு அணிகளும் டாஸ் போட அழைக்கப்பட்ட  நிலையில், டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

எனவே, இன்று 7:30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ள நிலையில்,   பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

இன்றைய போட்டியில் யார் ஜெயிப்பது?  என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.