1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 19 ஜனவரி 2022 (10:37 IST)

செப்டம்பர் மாதத்தோடு முடிகிறது கங்குலி & ஜெய் ஷாவின் பதவிகாலம்!

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பேற்றார்.

இந்திய அணி வீரர்களில் ஒருவரான கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற போது வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கங்குலியால் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என வாழ்த்தினர். ஆனால் இப்போது கங்குலி மீது மிகப்பெரிய அதிருப்தியே நிலவுகிறது. இந்திய கேப்டன் விராட் கோலியை பிசிசிஐ நடத்தும் விதம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பிசிசிஐ செயலாளரும்- உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் கைப்பாவையாக கங்குலி செயல்படுகிறார் என்றும் விமர்சனங்கள் உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு இவர்கள் இருவரின் பதவிக்காலமும் முடியவுள்ள நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.