வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : ஞாயிறு, 4 டிசம்பர் 2016 (16:37 IST)

72 வயதில் அறிமுகமான கிரிக்கெட் வீரர்

உலகிலேயே கிரிக்கெட் களத்தில் அதிக வயதான அறிமுக வீரராக களமிறங்கியவர் என்ற பெருமையை பெற்றவர் ராஜா மஹாராஜ் சிங்.


 

 
நவம்பர் 27, 1950ம் ஆண்டு தனது 72வது வயதில் நடந்த முதல்தர டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ராஜா மஹாராஜ் சிங் மும்பை அணி சார்பாக அறிமுக வீரராக களமிறங்கினார்.
 
மும்பை கவர்னர் அணியின் கேப்டனாகவும் களமிறங்கிய சிங், தனது முதல் இன்னிங்சில் 4 ரன்கள் மட்டுமே எடுத்தார். காயம் காரணமாக இரண்டாவது இன்னிங்சில் விளையாடவில்லை. 
 
இதுவே ராஜா மஹாராஜ் சிங் விளையாடிய முதல் மற்றும் கடைசி போட்டியாகும். அதுவும் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே விளையாடியுள்ளார். 
 
இவர் மும்பையின் முதல் இந்திய கவர்னர் என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் போட்டியில் விளையாடி 9 ஆண்டுகள் பிறகு 1959ஆம் ஆண்டில் மரணமடைந்தார்.