செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Updated : வியாழன், 15 ஜூலை 2021 (20:27 IST)

இந்திய அணியின் மேலும் 2 பேருக்கு கொரொனா !

இலங்கை- இந்தியா அணிகள் பங்கேற்கும் கிரிக்கெட் தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் தற்போது ரிஷப் பாண்டை தொடர்ந்து மற்றொருவருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

இந்தியா – இலங்கை தொடருக்கு இரு அணிகளும் ஆயத்தமாஇ வந்த நிலையில் சமீபத்தில் இலங்கை அணியில் இடம்பெற்றிருந்த உறுப்பினர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 13 ஆம்தேதி தொடங்கவிருந்த கிரிக்கெட் போட்டி வரும் ஜூலை 18 ஆம் தேதி தொங்கும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்நிலையில் போட்டிகள் நெருங்கிவருவதால் வீர்ரள் பாதுகாப்பாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது இந்திய வீரர்களான ரிஷப் பாண்ட்டைத் தொடந்து இந்திய அணியின் உதவியாளரான தயான்ந்த் என்பவருக்குக் கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

எனவே அவருடன் தொடர்பில் இருந்த வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர் கண்காணிப்பில் உள்ளனர்.  இதனால் போட்டி மீண்டும் தள்ளிப்போகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.