வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 21 செப்டம்பர் 2022 (08:46 IST)

“208 நல்ல ஸ்கோர்… ஆனா அவர்கள் சொதப்பிவிட்டார்கள்…” கேப்டன் ரோஹித் ஷர்மா வேதனை!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா நேற்றைய தோல்விக்கு பிறகு பவுலர்களின் குறைகளைப் பற்றி பேசியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி நேற்று மொஹாலியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா 208 ரன்கள் சேர்த்தது. பின்னர் களமிறங்கிய ஆஸி அணி கடைசி ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

இந்த தோல்வி குறித்து போட்டிக்குப் பின்னர் பேசிய கேப்டன் ரோஹித் ஷர்மா “நாங்கள் நன்றாக பந்து வீசவில்லை என்று நினைக்கிறேன். 200 என்பது எதிரணியை வீழ்த்த் ஒரு நல்ல ஸ்கோர், மேலும் களத்தில் எங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை (கேட்ச்களை) நாங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. இது எங்கள் பேட்டர்களின் சிறப்பான முயற்சி, ஆனால் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவிசவில்லை. என்ன தவறு நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள இது ஒரு சிறந்த போட்டியாக இருந்தது. இந்த மைதானத்தில் 200 எடுத்தாலும் உறுதியாக இருக்க முடியாது. நாங்கள் ஒரு அளவிற்கு விக்கெட்டுகளை எடுத்தோம், ஆனால் அவர்கள் நன்றாக விளையாடினார்கள்.

அவர்கள் சில அசாதாரண ஷாட்களை விளையாடினர். கடைசி 4 ஓவர்களில் 60 ரன்களை நீங்கள் கட்டுப்படுத்தலாம். அந்த கூடுதல் விக்கெட்டை எங்களால் எடுக்க முடியவில்லை. அதுதான் திருப்புமுனை, நாங்கள் இன்னொரு விக்கெட் எடுத்திருந்தால், விஷயங்கள் வேறுவிதமாக இருந்திருக்கும். எல்லா போட்டிகளிலும் 200 ரன்கள் எடுக்க முடியாது, நன்றாக பேட் செய்ய வேண்டும். ஹர்திக் மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்து எங்களை அங்கு அழைத்துச் சென்றார். அடுத்த ஆட்டத்திற்கு முன் நமது பந்துவீச்சைப் பார்க்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.