கொரோனாவைரஸ் தாக்காமல் தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் என்ன....?

Written By Sasikala
Updated: புதன், 4 மார்ச் 2020 (14:58 IST)
 
* நோய்த்தொற்று இருப்பவர்களிடம் நெருக்கமாக இருப்பது, தொடுவது, கை குலுக்குவது ஆகியவற்றாலும் பரவும்.
 
* வைரஸ் தொற்று தேங்கியிருக்கும் ஏதாவது பொருளைத் தொடுவதின் மூலம் பரவும்.
 
* அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும். கைகளை சோப்பு கொண்டு 20 வினாடிகள் வரை நன்றாகக் கழுவ வேண்டும். 
 
* கைகளின் முன்பக்கம், பின்பக்கம், நகக்கண்கள் விரல்களுக்கு இடையேயும் சுத்தம் செய்ய வேண்டும்.
 
* கைகளை நன்றாகக் கழுவாமல் கண்கள், மூக்கு வாய் அருகே கொண்டு செல்லக்கூடாது.
 
* சளி போன்ற சுவாசக்கோளாறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து 2 மீ. விலகியிருக்க வேண்டும்.
 
* அசைவ உணவுகளை நன்றாக வேகவைத்து சாப்பிடுவது நல்லது. 
 
* கொரோனா வைரஸ் தாக்கியதன் அறிகுறிகள்: வறட்டு இருமல், மூச்சுத்திணறல், உடல் வலி, நிமோனியா, கிட்னி செயலிழப்பு போன்றவை ஏற்படும்.
ஒருவேளை தொற்று பரவினால்:
 
நோய்த்தொற்று இருப்பதாக உணர்ந்தாலோ அறிந்து கொண்டாலோ வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள். நோய் பாதித்தவரை தனிமை படுத்துவது அவசியம்.
 
மற்றவர்களை உங்களுக்கு அருகில் நெருக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள்.
 
சுற்றியுள்ள பொருள்களையும் இடங்களையும் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.
 
தும்மல் மற்றும் இருமல் வரும்போது வாய் மற்றும் மூக்குப் பகுதியை துணி அல்லது டிஸ்யூ கொண்டு மூடிக் கொள்ளுங்கள்.

எல்லாம் காட்டு

இரவில் சிக்கன் சாப்பிடலாமா?!.. மருத்துவர்கள் சொல்வது என்ன?..

ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் அளவில் கடுமையாக சரிவு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!..

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

அடுத்த கட்டுரையில்
Show comments