1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 2 ஜனவரி 2024 (21:09 IST)

ஜப்பானில் நிலநடுக்கங்களை தாங்கி நிற்கும் கட்டடங்கள் - நூறாண்டு ரகசியம் என்ன?

japan
புகுஷிமா அணு உலை விபத்துக்கு வழிவகுத்த பேரழிவான நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டு 13 வருடங்கள் ஆகின்றன.
 
ஆனால் ஜப்பானில் அதன் நினைவுகள் இன்றும் உள்ளன. திங்கட்கிழமை, இஷிகாவாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அத்துடன், சுனாமி எச்சரிக்கை அலாரங்கள் ஒலிக்கத் தொடங்கியதால், அவர்கள் அனைவரும் அதில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தனர்.
 
ஜப்பானில், இந்த எச்சரிக்கைகள் அசாதாரணமானவை அல்ல.
 
நான் முதலில் அங்கு சென்றபோது, எனது கட்டிடத்தில் சிறிய நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து எனது படுக்கையில் இருந்து வெளியே வந்தேன்.
 
ஆனால் சில மாதங்களிலேயே நில நடுக்கத்தைத் தாண்டி என்னால் இயல்பாக தூங்க முடிந்தது. தற்போது ஜப்பானில் நிலநடுக்கங்கள் ஒரு சாதாரண வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறுகின்றன. நீங்கள் இறுதியில் அவர்களுடன் வாழ பழகுவீர்கள்.
 
அந்த நிலையான உணர்வு உங்கள் மனதின் பின்புறத்திலிருந்து ஒருபோதும் மறைந்துவிடாது. அடுத்த பெரும் விபத்து எப்போது நம்மை தாக்கும் ? நமது கட்டடம் போதுமானதா? என தோன்றும்.
 
இந்த தலைமுறையினருக்கு அந்த அச்சங்கள் அனைத்தும் 11 மார்ச் 2011 அன்று உணரப்பட்டன .
 
ஒரு இரண்டு நிமிடங்களுக்கு யாரும் நினைத்து பார்த்திடாத வகையில் பூமி அதிர்ந்தது. அது முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
 
அங்கு வாழ்ந்தவர்களுக்கு இன்னும் தங்கள் வாழ்ந்த இடத்தையும் பேரழிவின் அளவையும் தெளிவாக நினைவில் வைத்திருக்க முடியும். இருப்பினும், இதைவிட மோசமானது வரவிருந்தது.
 
நாற்பது நிமிடங்களுக்குள், முதல் சுனாமி கடற்கரைக்கு வந்தது. கடல் சுவர்களை உடைத்து, ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு நகரங்களையும் கிராமங்களையும் தாக்கியது. இவை அனைத்தும் செண்டாய் நகரத்தின் மீது ஒரு செய்தி ஹெலிகாப்டர் மூலம் நேரடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
 
 
2024 புத்தாண்டன்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மத்திய ஜப்பானில் வீடுகள் இடிந்து விழுந்தன
 
அடுத்த நாள் இன்னும் மோசமான செய்தி வந்தது. அணுமின் நிலையம் ஒரு நெருக்கடியை சந்தித்தது. ஃபுகுஷிமா அணுஉலைக்குள் கடல் நீர் புகுந்ததால் அவசர நிலை ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைநகரம் டோக்கியோ கூட பாதுகாப்பாக உணரவில்லை.
 
அந்த நாள் ஒரு ஆழமான மறக்க முடியாத அதிர்ச்சியை விட்டுச் சென்றது. அடுத்த சில மாதங்களில் தங்குவதற்கான புதிய இடத்தைப் டோக்கியோவில் பார்த்தேன். நதியிலிருந்தும் வெகு தொலைவில் உள்ள உயரமான நிலப்பரப்பில் வலுவான அடித்தளம் எங்குள்ளது என்பதைத் தீர்மானிக்க, என் மனைவி புவியியல் வரைபடங்களை ஆய்வு செய்தார். கட்டிடங்களின் வயதை பற்றி அவளுக்கு பெரும் ஆர்வம் இருந்தது.
 
அவள் மிகவும் தெளிவாக இருந்தாள்,"நாங்கள் 1981க்கு முன் கட்டப்பட்ட எதையும் பார்க்கவில்லை" என்று கூறினார்.
 
நாங்கள் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கட்டடத்திற்கு மாறியவுடன், நாங்கள் தண்ணீரையும் உணவையும் சேமித்து வைக்க ஆரம்பித்தோம். பாத்ரூம் சின்க் அடியில் நிரம்பியிருந்த பெட்டிகள், ஐந்து வருட அடுக்கு ஆயுளுடன் கூடிய முன்பே பேக்கேஜ் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள்.
 
திங்கட்கிழமை, 2011இல் அச்சமும் பயங்கரமும் மீண்டும் தலைதூக்கியிருந்தது.
 
இருப்பினும், சமீபத்திய நிலநடுக்கம் ஜப்பானின் சாதனைகளின் அற்புதமான கதையைச் சொல்கிறது.
 
ஜப்பான் நிலநடுக்கங்களை ரிக்டர் அளவில் அறிக்கை செய்வதில்லை. நிலம் எவ்வளவு அதிர்கிறது என்பதை இது தெரிவிக்கிறது. இந்த அளவுகோல் 1 முதல் 7 வரை செல்கிறது. மேலும் திங்களன்று இஷிகாவாவில் அதிர்வு அதிகபட்சமாக 7ஐத் தாண்டியது.
 
சாலைகள், பாலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இது பெரும் நிலச்சரிவை ஏற்படுத்தியது. இருப்பினும், பெரும்பகுதி கட்டமைப்புகள் அப்படியே உள்ளன.
 
ஏற்கனவே, டோயாமா மற்றும் கனாசாவா ஆகிய பெரிய நகரங்களில் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
 
அருகில் உள்ள காசிவாசகியில் உள்ள நண்பருடன் பேசினேன். அவர் அதுகுறித்து கூறுகையில் "உண்மையில் திகிலூட்டும்" என்று விவரித்தார். "இதுவரை நான் இங்கு சந்தித்திராத மிகப் பெரியது இது. கூடுதலாக, நாங்கள் கடற்கரையிலிருந்து தப்பி ஓட வேண்டியிருந்தது. இப்போது நாங்கள் வீட்டிற்குத் திரும்பி விட்டோம் எல்லாம் நன்றாக இருக்கிறது." என்று அவர் கூறினார்.
 
ஒரு நூற்றாண்டுக்கு முன், 1923ல், டோக்கியோவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்ட போது தொடங்கிய பொறியியல் சாதனையின் அற்புதமான கதை இது.
 
சோழர்களைப் போல செயற்கை ஏரிகள் அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டம் வெள்ளத்தை சமாளிக்க உதவுமா?
 
நிலநடுக்கங்களை தாங்கி நிற்கும் கட்டடங்கள் - நூறாண்டு ரகசியம் என்ன?
கிரேட் காண்டோ நிலநடுக்கம், அறியப்பட்டபடி இந்த நிலநடுக்கத்தால் டோக்கியோ நகரத்தின் பெரும் பகுதிகள் அழிந்தன. ஐரோப்பிய பாணியில் வடிவமைக்கப்பட்ட தற்கால செங்கல் கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன.
 
இதன் பின்விளைவாக ஜப்பானில் நிலநடுக்கத்தை எதிர்கொள்ளும் முதல் கட்டுமான குறியீடு உருவாக்கப்பட்டது. அதிலிருந்து புதிய கட்டடங்கள் இரும்பு மற்றும் கான்கிரீட்டால் வலுப்படுத்தப்பட வேண்டும். மரக் கட்டடங்கள் தடிமனான விட்டங்களைக் கொண்டிருக்கும்.
 
ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிடத்தக்க நிலநடுக்கம் நாட்டை தாக்கும் போது, ​​சேதம் மதிப்பிடப்பட்டு புதிய கட்டுப்பாடுகள் வைக்கப்படுகின்றன. மிகப்பெரிய மாற்றம் 1981ஆம் ஆண்டு நடந்தது, மேலும் அனைத்து புதிய கட்டுமானங்களும் நில அதிர்வு தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளைக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. மீண்டும், 1995 கோபி பூகம்பத்தின் போது அதிக பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டன.
 
2011-ம் ஆண்டு 9.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்ட போது, ​​டோக்கியோவில் 5-வது நிலநடுக்கம் ஏற்பட்டது. 1923-ல் ஜப்பான் தலைநகர் சந்தித்த அதிர்வுக்கு சமம்.
 
1923 இல் நகரமே தரைமட்டமான போது, 1,40,000 மக்கள் இறந்தனர். 2011 இல் பெரிய வானளாவிய கட்டடங்கள் அசைந்தன மற்றும் ஜன்னல்கள் உடைந்தன, ஆனால் பெரிய கட்டடங்கள் எதுவும் இடிந்து விழவில்லை. பல ஆயிரம் பேரைக் கொன்றது சுனாமிதானே தவிர, நிலநடுக்கம் அல்ல.
 
நிலநடுக்கத்தால் பாதிப்புக்கு உள்ளான பழைய மர வீடுகளின் படங்கள் இஷிகாவாவில் உள்ளன. ஒரு நவீன கட்டிடம் இடிந்து விழுந்தது, செய்தி சேனல்கள் அது 1971 இல் கட்டப்பட்டது என்று சுட்டிக் காட்டுகின்றன. இதில் சில பேர் இறந்ததாகக் கூறப்படுகிறது. பலர் காயமடைந்துள்ளனர்.
 
ஆனால் பூமியில் வேறு எந்த நாட்டையும் இதுபோன்ற ஒரு நிலநடுக்கம் மிகவும் மோசமாக பாதிக்காமல் இருக்கலாம் என்று நினைப்பது கடினம்.