தொடர்புடைய செய்திகள்
- உலகிலேயே கொரோனா பாதிக்காத பகுதிகள் இதுதான்! – ஆய்வாளர்கள் ஆச்சர்யம்!
- முதல்வர் கெஜ்ரிவாலுக்கு கொரோனாவா? – தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்!
- "அரசியமைப்பு சட்டத்திலிருந்து திசைமாறிச் செல்கிறார் டிரம்ப்” - குடியரசு கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு
- ரூ.10.90 கோடி அபராதம் வசூல்: காவல்துறை தகவல்!
- 4000ஐ நெருங்கும் ராயபுரம்: சென்னை கொரோனா நிலவரம்
கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனாவை விஞ்சிய மகாராஷ்டிரா
தற்போது உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5வது நாடாக இந்தியா உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து, 15 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவித்துள்ளது.
கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதுவரை கொரோனாவால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக பிரிட்டனில் 40,625 பேர் கொரோனாவால் உயிரித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,975 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட இது அதிகம். மும்பையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,774 ஆக உள்ளது. இதுவரை மகாராஷ்டிராவில் 2,969 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தற்போது உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட 5வது நாடாக இந்தியா உள்ளது.