1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (13:23 IST)

விவசாயிகள் போராட்டம்: "பிரதமரின் வானொலி நிகழ்ச்சியின்போது மணியோசை எழுப்புங்கள்"

தமிழக, இந்திய மற்றும் உலக அளவிலான முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு இது.
 
மத்திய அரசின் புதிய விவசாயச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 26ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மேலும் இன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் 11 விவசாயிகள் தினமும் உண்ணாவிரதம் இருப்பர் என்றும் தெரிவித்துள்ளனர்.
 
மேலும் ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவர்களை டிசம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு கோரப் போவதாகத் தெரிவித்தனர்.
 
முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத் தலைவர், டிசம்பர் 27ஆம் தேதியன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 'மன் கி பாத்' வானொலி நிகழ்ச்சியில் பேசும்போது வீடுகளில் ஒவ்வொருவரும் மணியோசை எழுப்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
டெல்லியில் நிலவும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பஞ்சாப், ஹரியாணா மற்றும் வேறு சில மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியின் எல்லையில் பல நாட்களாக முகாமிட்டுப் போராடி வருகின்றனர்.
 
மூன்று புதிய வேளாண் சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.