வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 23 ஜூலை 2016 (05:46 IST)

45 தடகள வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானது

லண்டன் மற்றும் பெய்ஜிங் விளையாட்டின் போது எடுக்கப்பட்ட இரண்டாவது தொகுப்பு மாதிரிகளை சோதனை செய்ததில், மேலும் 45 தடகள வீரர்கள் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது என்று சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்துள்ளது.
 

 
அவர்களில், 23 தடகள வீரர்கள் 2008 ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர்கள் என்று ஒலிம்பிக் குழு கூறியுள்ளது.
 
சமீபத்திய முடிவுகளின் படி, பெய்ஜிங் மற்றும் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்கமருந்து பயன்படுத்திய தடகள வீரர்களின் மொத்த எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது.