1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By Sasikala
Last Modified: வெள்ளி, 3 டிசம்பர் 2021 (12:28 IST)

சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாடு வந்தவருக்கு கொரோனா

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த விமான பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

"அவருக்கு ஒமிக்ரான் தொற்று உள்ளதா என கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்ட்டுள்ளன. சோதனை முடிவு வந்த பிறகே ஒமிக்ரான் பாதிப்பா என்பது தெரிய வரும்," என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
ஒமிக்ரான் தொற்று அச்சுறுத்தல் உள்ள நாடுகள் உள்ள பட்டியலில் உள்ள சிங்கப்பூரில் இருந்து தமிழ்நாட்டில் திருச்சிக்கே அதிக பயணிகள் வருகின்றனர்.