பாகிஸ்தானில் 2 ரயில்கள் மோதல்: 25 பேர் உயிரிழப்பு

திங்கள், 7 ஜூன் 2021 (10:17 IST)
பாகிஸ்தானில் இரண்டு ரயில்கள் மோதிக் கொண்ட விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் காயமடைந்தனர்.

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள தஹார்கி என்ற பகுதியில் சர் சையஸ் எக்ஸ்பிரஸ் மற்றும் மில்லட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மோதிக்கொண்டன.
 
இன்று அதிகாலையில் விபத்து நடந்ததாகவும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
 
பெட்டிகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருவதாகவும், மீட்கப்பட்டவர்கள் அருகேயுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் ஊடகங்கள் கூறுகின்றன.
 
மில்லட் எக்ஸ்பிரஸ் ரயில் கராச்சியில் இருந்து சர்கோதா நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சர் சையத் எக்ஸ்பிரஸ் ரயில் ராவல்பிண்டியில் இருந்து கராச்சி  நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

எல்லாம் காட்டு

அபுதாபியில் நீட் தேர்வு செண்டர்!.. ஹால் டிக்கெட்டில் குளறுபடி!.. மாணவர் ஷாக்!..

காசா அழிஞ்சிட்டிருக்கு!.. ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க!.. இந்தியாவுக்கு பாலஸ்தீனம் கோரிக்கை..

ஆளுநர் விவகாரம்!.. ஐஸ் வைத்த விஜய்!.. கூலான மோடி!. நடந்தது என்ன?...

போரை நடத்தி ஒரு யூசும் இல்ல!.. டொனால்ட் டிரம்பை திட்டிய பராக் ஒபாமா!..

முதல்வரான பின் முதல் விருது விழா!.. லிஸ்ட்டை ரெடி பண்ண சொன்ன விஜய்!...

அடுத்த கட்டுரையில்
Show comments