1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2019 (08:38 IST)

பத்து குழந்தைகள் நரபலியா? - 65 சூனியக்காரர்கள் கைது

உடல் உறுப்புக்காக ஆறு குழந்தைகள் தான்சான்யாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
 
கொல்லப்பட்ட அந்த குழந்தைகளின் காது, பற்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கொல்லப்பட்ட சிறுவர்களுக்கு வய்து இரண்டிலிருந்து, ஒன்பதுக்குள்தான் இருக்கும். சில குழந்தைகளின் மூட்டு பகுதியும் நீக்கப்பட்டுள்ளது.
 
மூடநம்பிக்கையின் காரணமாகவே இது நடந்துள்ளது. குழந்தைகளின் உடல் பாகங்கள் செல்வத்தை கொண்டு வருமென சூனியக்காரர்கள் சொல்வதை கேட்டு குழந்தைகளை கொன்று உடல் பாகங்களை வெட்டி உள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.