வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 30 நவம்பர் 2019 (18:31 IST)

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்

டிசம்பர் மாத ஜோதிடப் பலன்கள்: மகரம்

கிரகநிலை:
ராசியில் சந்திரன் - ரண, ருண , ஸ்தானத்தில்  ராஹூ -  தொழில் ஸ்தானத்தில்  செவ்வாய்,  புதன் -  லாப ஸ்தானத்தில்  சூர்யன்  -   அயன, சயன,  போக ஸ்தானத்தில்  சுக்ரன்,  குரு,  சனி , கேது  என கிரகங்கள் வலம் வருகின்றன.

கிரகமாற்றங்கள்:
3-Dec-19 அன்று பகல் 11.50 மணிக்கு  புதன் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
16-Dec-19 அன்று இரவு 8.57 மணிக்கு சூரிய பகவான்  விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-Dec-19 அன்று இரவு 8.36 மணிக்கு சுக்கிர பகவான் ராசிக்கு மாறுகிறார்.
21-Dec-19 அன்று பகல் 2.54 மணிக்கு  புத பகவான் விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
28-Dec-19 அன்று பகல் 12.45 மணிக்கு செவ்வாய் பகவான் லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்:
உழைப்புக்கு அஞ்சாத உறுதியான மனம் கொண்ட மகர ராசியினரே, இந்த மாதம் எதையும் யோசித்து செய்வது நன்மை தரும். கோபமாக பேசுவதை தவிர்த்து நிதானமாக பேசி செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். வார இறுதியில் சேருவதால் எந்த விஷயத்திலும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வீண் குற்றச்சாட்டிற்கு ஆளாகலாம். கவனம் தேவை.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த  கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளிடம் கவனமாக  பேசுவது  நல்லது.  உறவினர்கள் வருகை இருக்கும். சொத்துக்கள் வாங்க எடுக்கும் முயற்சிகள் தாமதப்படும்.

தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்கப்பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்த ஆலோசனைகளை மேற்கொள் வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல தடைகளை சந்திக்க வேண்டி இருந்தாலும் முடிவில் வெற்றி உங்கள் பக்கமே இருக்கும். கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

கலைத்துறையினருக்கு நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. பணீகள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எடுத்த வேலைகளில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மன வலிமை அதிகரிக்கும். மக்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் பயன்தராத முயற்சிகளை கைவிட்டு எந்த ஒரு வேலையையும் ஆராய்ந்து செயல்படுவது வெற்றியை தரும். மாணவர்கள் எதிர்கால நலன் கருதி எந்த காரியத்தையும் செய்வது நன்மை தரும். தொழிலில் அபிவிருத்தி உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புடைய தொழில்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் முக்கிய பதவியொன்றை எதிர்பார்க்கலாம். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக பழகாதீர்கள். பேசும் போது வார்த்தைகளில் நிதானம் தேவை.

திருவோணம்:
இந்த மாதம் எந்த நிலையிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நீங்கள் பிடிவாத குணத்தை தளர்த்திக் கொண்டால் எதிலும் முன்னேற்றம் காண முடியும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப சூழ்நிலையில் திருப்தி இருக்கும். அவ்வப்போது உறவினர்களால் பிரச்சினை தலை தூக்கினாலும் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. உடன் பிறந்தவர்களிடம் யோசனை கேட்டு முடிவுகளை எடுப்பீர்கள். உடல்நிலையில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சொத்து பிரச்சினைகள்  முடிவுக்கு வரும்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் வெளியூர் பயணங்கள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரம் மூலம் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழில் வியாபார வளர்ச்சிக்கு தேவையான ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்தி சாதுரியத்தால் அலுவலக வேலைகளை திறமையாக செய்து முடித்து மதிப்பும் மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். கடன்களை அடைத்துவிடுவீர்கள். அதற்குண்டான பணவரவுகள், சூழ்நிலை வாய்க்கும். மனதில் இருந்த கவலைகள்  மறைந்து நிம்மதியான தூக்கம் வரும். வண்டி, வாகனங்கள் புதிதாக வாங்கக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது.

பரிகாரம்: தினமும் விநாயகரை வழிபட்டு வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வெள்ளி, சனி
சந்திராஷ்டம தினங்கள்: 17, 18, 19
அதிர்ஷ்ட தினங்கள்: 11, 12