செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
Written By Murugan
Last Modified: சனி, 11 பிப்ரவரி 2017 (12:55 IST)

பேனர் ரெடி...நினைவகம் ஆகிறதா ஜெ.வின் வீடு? - ஓ.பி.எஸ் அதிரடி

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லத்தை நினைவகமாக மாற்றும் முயற்சியில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


 

 
சசிகலாவிற்கு எதிராக திரும்பியிருக்கும் ஓ.பி.எஸ்-ஸின் அதிரடி நடவடிக்கைகள், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த பரபரப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது..
 
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பி.எஸ், ஜெ. வாழ்ந்து வந்த போயஸ் கார்டன் இல்லம், அவரது நினைவகமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும். அதற்காக ஒரு அறப்போட்டத்தை நாங்கள் துவக்கியுள்ளோம் எனக் கூறினார். 
 
இந்நிலையில், அதற்காக கையெழுத்து இயக்கத்தை ஓ.பி.எஸ் இன்று தொடங்கியுள்ளார். அதேபோல், அவரது வீட்டில் ஒரு பேனரும் தயாராக வைக்கப்பட்டுள்ளது.. 
 
ஆனால், இது போட்டோஷாப் வேலை என சிலரும், இல்லை.. இல்லை.. இது கையெழுத்து இயக்கத்திற்காக வைக்கப்பட்ட பேனர் எனவும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரவி வருகிறது..